'டாஸ்மாக் எங்களுக்கு வேண்டாம்': கோவை கீரணத்தம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

விவசாய நிலத்தில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே கோரிக்கைகளை மீறி மதுபானக் கூடம் அமைந்தால் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அன்னூர் வட்டம் கீரணத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கூடம் அமைப்பதை எதிர்த்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில், மதுபான கூடம் அமைத்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்றும், ஏற்கனவே கீரணத்தம் பகுதியில் மதுபான கூடம் அமைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடமும் கடிதம் வாயிலாக மனு அளித்துள்ளதாகவும், மக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது விவசாய நிலத்தில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே கோரிக்கைகளை மீறி மதுபானக் கூடம் அமைந்தால் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...