37-வருட நீலகிரி மலை ரயிலின் இசைக்குயிலுக்கு ஓய்வு..!

நீலகிரி மலை ரயில் பயணியரை மகிழ்வித்து 'பாடும் நிலாவாக' இருந்த 'நைட்டிங்கேல்' விருது பெற்ற டி.டி.ஆர்., வள்ளி பணி ஓய்வு பெற்றுள்ளார்.



நீலகிரி: குன்னுாரில் இருந்து நீலகிரி மலை ரயில் பயணத்தில் பயணியர் மகிழ்ச்சியாக பாடல்கள் பாடி பயணியரை கவர்ந்த - நைட்டிங்கேல் என்ற விருதைப் பெற்றுள்ளார் பணி ஓய்வு பெற்ற வள்ளி (டி.டி.ஆர்) யார் இவர்?



நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணியரை பாடல்களால் மகிழ்ச்சி அடைய செய்தவர் டிக்கெட் பரிசோதகர் வள்ளி. இவர் 1962-யில் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள சரனூரில் பிறந்தார்.

தனது பள்ளி படிப்பினை குடும்ப சூழ்நிலை காரணமாக பாதியில் கைவிட்ட இவர். தனது தந்தை 1983-யில் இறந்த பின்னர் அவரது தூய்மை பணியாளர் வேலையை சரனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் செய்து வந்தார்.

அதனை தொடர்ந்து பணியிடை மாற்றம் செய்யப்பட்ட இவர் குன்னூரில் 1991-இல் இருந்து 2011- வரை பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து 2012 டி.டி.ஆர் காண தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர் ஜனவரி 2016-இல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் டி.டி.ஆராக சேர்ந்தார்.



தமிழ், மலையாளம், ஹிந்தி, படுகா உள்ளிட திரைப்படப் பாடல்களைப் பாடி சுற்றுலா பயணியரை கவர்ந்தார். பாடல் என்பது எனது பணி அல்ல, ஆனால் பெரிதும் ஊட்டிக்கு செல்பவர்கள் தங்களது மன நிம்மதியையும், சந்தோசத்தையும் தேடி செல்கின்றனர்.



அதனால் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், ரயிலில் சுற்றுலா பயணியர் சோர்வடையாமல் இருக்க, தினமும் சினிமா பாடல்களை பாடி மகிழ்விப்பேன். இதனால், சேலம் கோட்ட பொது மேலாளரிடம் விருது பெற்றேன்.

ரயில்வே அமைச்சகம் எனக்கு, 'நைட்டிங்கேல்' விருது வழங்கியது. எனது 37-ஆண்டு பணியில் நீலகிரி மலை ரயிலில் பணிபுரிந்த காலம், வாழ்வின் பொற்காலமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...