கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் அனைத்து தங்க நகைக் கடைகளில் ஓரளவு நல்ல விற்பனை காணப்பட்டது. இதனால், தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: அட்சய திருதியை முன்னிட்டு தொழில் நகரான கோவையில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மோதிரம், தோடு உள்ளிட்ட சிறிய நகைகள் மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியகோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-

அட்சய திருதி தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை நாளன்று வழக்கத்தைவிட தங்க நகைகள், பவுன் காசு, உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகம் காணப்படும்.
அந்த வகையில், அட்சய திருதியை நாளான இன்று கோவை நகரில் உள்ள கடைகளில் மட்டும் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மோதிரம், தோடு, சின்ன செயின் உள்ளிட்ட சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கவே பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
அட்சய திருதியை தினத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நகைகள் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் அனைத்து தங்க நகைக் கடைகளில் ஓரளவு நல்ல விற்பனை காணப்பட்டது. இதனால் தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு முத்து வெங்கட்ராம் கூறினார்.
இது குறித்து பேசியகோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
அட்சய திருதி தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை நாளன்று வழக்கத்தைவிட தங்க நகைகள், பவுன் காசு, உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகம் காணப்படும்.
அந்த வகையில், அட்சய திருதியை நாளான இன்று கோவை நகரில் உள்ள கடைகளில் மட்டும் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மோதிரம், தோடு, சின்ன செயின் உள்ளிட்ட சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கவே பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
அட்சய திருதியை தினத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நகைகள் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் அனைத்து தங்க நகைக் கடைகளில் ஓரளவு நல்ல விற்பனை காணப்பட்டது. இதனால் தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு முத்து வெங்கட்ராம் கூறினார்.