கோவை சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை - 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தது - விவசாயிகள் வேதனை….!

லிங்காபுரம், மொக்கைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் முறிந்து நாசமாகியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து நாசமாகின. இதனால், விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், மொக்கைமேடு, காந்தவயல், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது வருவதால்,லிங்காபுரம், மொக்கைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் முறிந்து நாசமாகியுள்ளன. 

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது :காட்டு யானைகளின் தொந்தரவால் ஏற்கனவே விவசாயம் அழிந்து வருகிறது. மற்றொரு புறம் பயிர்களுக்கான இடுபொருட்கள், உரம் உள்ளிட்டவற்றின் விலையேற்றமும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில், மழை,காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினாலும் விவசாயம் நாசமாகி வருகிறது. இதனால், விவசாயத்தை நம்பி வாங்கியுள்ள கடனையும் கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...