கொடநாடு வழக்கு - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் விசாரணை….!

கடந்த மாதம் 29, 30 ஆகிய இரண்டு தினங்கள் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கொடநாடு கொலை கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் இன்று மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படைகள் கடந்த ஒரு மாத காலமாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடமும், புதிய நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, விசாரணை நடத்திய நபர்களையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரும் போலீசார், புதிய நபர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி வருகின்றனர். 

அந்த வகையில், இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கு மேலாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றினிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த மாதம் 29, 30 ஆகிய இரண்டு தினங்கள் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, காலை 10.30 மணி அளவில் பூங்குன்றன் தனிப்படை போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார். 



அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் போது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் யார் யாருக்கெல்லாம் எளிமையாக அனுமதி வழங்கப்பட்டது? அங்கு முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் அறைக்குள் செல்ல யார் யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும்? ஓட்டுநர் கனகராஜ் ஜெயலலிதாவிடம் பணியாற்றிய போது எந்த மாதிரியான செயல்பாடுகளை செய்து வந்தார்? என்பது தொடர்பாக போலீசார் கேள்விகளை எழுப்பி வருவதாக கூறப்படுகிறது. 



மேலும், பூங்குன்றனிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் உயிரிழந்ததை அடுத்து, கூடுதல் தகவல்களை பெறுவதற்காக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், விரைவில் இந்த வழக்கில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...