சிறையில் அவருக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை போத்தனூர் சிட்கோ பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (60). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தனது மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்ய வைத்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த வழக்கில், கிருஷ்ணவேணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி முதல் கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறையில் இருந்த அவருக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், கிருஷ்ணவேணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி முதல் கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறையில் இருந்த அவருக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.