இன்று மாலை, கோவை வாளையாறு அருகே உள்ள புதுப்பதி மலை கிராமம், அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை வாளையாறு அருகே உள்ள புதுப்பதி மலை கிராமம், அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே தமிழக எல்லையில் புதுப்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.

இந்நிலையில், இன்று மாலை புதுப்பதி மலை கிராமத்திற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து, தோட்ட உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர்.

சிறிது நேரம், அதே பகுதியில் நின்ற யானை, அருகே இருந்த குட்டைக்கு சென்று நீர் அருந்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. தகவலறிந்து வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள், யானை முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும் வரை உடன் சென்று விரட்டினர்.
மாலை நேரத்தில், திடீரென ஒற்றை காட்டு யானை தோட்டத்திற்குள் புகுந்ததால் புதுப்பதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே தமிழக எல்லையில் புதுப்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.
இந்நிலையில், இன்று மாலை புதுப்பதி மலை கிராமத்திற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து, தோட்ட உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர்.
சிறிது நேரம், அதே பகுதியில் நின்ற யானை, அருகே இருந்த குட்டைக்கு சென்று நீர் அருந்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. தகவலறிந்து வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள், யானை முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும் வரை உடன் சென்று விரட்டினர்.
மாலை நேரத்தில், திடீரென ஒற்றை காட்டு யானை தோட்டத்திற்குள் புகுந்ததால் புதுப்பதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.