கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதளம் (www.tndwreginet.net) துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட பத்திர - நகல் எழுத்தாளர் சங்கத்தின் புதிய இணையதளம் துவக்க விழா கோவை பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதள துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த இணையதள சேவையை, அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
தமிழகத்திலியே பத்திர எழுத்தாளர்களுக்கான இணையதள சேவை, கோவை மாவட்டத்தில் தான் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளம் மூலம் www.tndwreginet.net, அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தாளர்களை கண்டறிவதோடு, மின் கட்டணம், ரயில்வே முன்பதிவு, டிடிசிபி அங்கீகாரம், மற்றும் வேலை வாய்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இணையதளம் மூலம் பொதுபோக்கு நிகழ்ச்சிக்காக முன்பதிவுகளை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல, கோவையை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவையை துவங்கி இறுதியாக ஒரே இணைய தளமாக மாற்றும் இலக்கு உள்ளதாக, சங்கத்தினர் தெரிவித்தனர்.