சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரியகடைவீதி போலீசார், இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை வைசியாள் வீதி பொன்னம்பலம் செட்டி காலனியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் கணேசன்(55). ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவு மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அப்போது, வைசியாள் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நான்காவது தளத்தில் இருந்து கணேசன் குதித்ததாக தெரிகிறது. கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு வந்த பெரியகடைவீதி போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அப்போது, வைசியாள் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நான்காவது தளத்தில் இருந்து கணேசன் குதித்ததாக தெரிகிறது. கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு வந்த பெரியகடைவீதி போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.