திமுக வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது.



சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பரமனியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்கு உறுதி அளித்தபடி தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும், பத்தாண்டுகள் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், ஒய்வுதியம் இல்லாத தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வுதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.



மேலும், அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட கால முறை பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் வழங்க வேண்டும், என 20 கோரிக்கை அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அங்கன்வாடி மைய பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நியாயவிலைகடை மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர், இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...