கோவை மாநகராட்சி சார்பில் விசுவாசபுரம் பகுதியில் மெகா மாஸ் கிளீனிங்..!

மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இதில், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில், மாஸ் கிளீனிங் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் கோரிக்கையின்படி, மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, தலைமையில் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மண்டல சுகாதார அதிகாரி முருகன், ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 50-தூய்மைப் பணியாளர்களை அன்னை நகர் ஆண்டியப்ப தேவர் லேயவுட் ஆகிய பகுதிகளில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளர் மயில்சாமி, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரகுராமன், கம்யூனிஸ்ட் கட்சி LIC சுந்தரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த பிரான்சிஸ், பெனிக்ஸ் லியோ, இருதயராஜ், ரூபி, அய்யாவு, மேரி, ஆரோக்கியசாமி, முத்துக்குமார், மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் தாஸ், முருகானந்தம், தமிழ்வாணன், ஜோய், விசுவாசபுரம் குடியிருப்பு அசோசியேசன் தலைவர் அமிர்தராஜ், மற்றும் பாபு, முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் ஆகச்சிறந்த பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.











Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...