கெயில் குழாய் பதிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்- கோவையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து திட்டவட்டம்..!

இந்த கெயில் குழாய் என்பது கோவை-கிருஷ்ணகிரி வரை 310-கிலோ மீட்டர் தூரம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.



கோவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இதில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் பல கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

சாலை விரிவாக்கம், புறவழி சாலை, மேம்பால விரிவாக்கம், நொய்யல் சீரமைப்பு, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், அன்னூர் பைபாஸ், அத்திக்கடவு அவிநாசி திட்டம், வனவிலங்குகளால் விவசாயத்திற்கு விவசாயிகளுக்கும் ஏற்படும் ஆபத்துகள் ஆகிய திட்டங்களில் சில நிறைவேற்றப்பட்டும் நிறைவேற்றப்படாமலும் இருப்பதாக தெரிவித்தார்.

இதையெல்லாம், நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். இத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றும் போது விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் உயர்மின் கோபுரங்கள், கெயில் குழாய் அமைப்பதாக இருந்தால் விளை நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டுமென்பது தான் தங்கள் கோரிக்கை எனவும் கூறினார்.



ஜெயலலிதா காலத்தில் கெயில் குழாய் விளை நிலங்களில் பதிக்கவே கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்ட அவர் ஆனால் கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

அதில் விவசாயிகள் சம்மதித்தால் மட்டுமே குழாய்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே அரசு விவசாய நிலங்களை விட்டுவிட்டு ரயில் பாதைகளுக்கு அருகே, புறம்போக்கு நிலங்களில் குழாய்களைப் பதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பணியாற்றிய ஆட்சித்தலைவர் எல்லாம் விவசாய சங்க தலைவர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியரும் அதே போலவே தான் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிலர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதாக கூறி வருகின்றனர்.

அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் கெயில் நிறுவனத்திற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆதரவாளராக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கெயில் குழாய் என்பது கோவை-கிருஷ்ணகிரி வரை 310 கிலோ மீட்டர் தூரம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்கு முதல்வர் கூறியதை போல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி, தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...