கோவை ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில், முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.


கோவை: இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள் பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து, 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்..

இதனைத் தொடர்ந்து, 30 வது நாளான இன்று ரமலான் மாத புனித நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.



கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையானது ரத்து செய்யப்பட்டு, எளிய முறையில் வீடுகளில் தொழுகை நடத்தபட்டது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால், கோவையில் ரம்ஜான் பண்டிகை பள்ளிவாசல்களில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பண்டிகையையொட்டி கோவையில் உள்ள அனைத்து மசூதிகளில் இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில், முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஜிபி நாசர், இமாம்.சையத் அலி பாகவி, ரயில்வே ஜமீல், ஏஜாஸ் உள்ளிட்ட குழந்தைகள் பெரியவர்கள் என அப்பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.



புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இன்றைய, தினத்தில்தங்கள் இல்லங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளை சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சி பொங்க இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...