வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைகிறதா..? - கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு…!

வேளாண் துறை சார்பில் என்னென்ன திட்டங்கள் மதுக்கரை வேளாண் வட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் வேளாண் துறை அதிகாரிகளிடம், ஆட்சியர் கேட்டறிந்தார்.

கோவை: மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கரை ஒன்றியம் மாவுதம்பதி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பார்வையாளராக கலந்துக் கொண்டார். 



அப்போது அங்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக கருத்து காட்சி வைக்கப்பட்டது. அதில், மதுக்கரை வட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் களை எடுக்கும் கருவிகள், மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர் அங்கு வந்த விவசாயிகளிடம் முழுமையாக வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைகிறதா..? என வினவினார். 

மேலும், வேளாண் துறை சார்பில் என்னென்ன திட்டங்கள் மதுக்கரை வேளாண் வட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அட்டைகள் வந்தபிறகு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இந்நிகழ்ச்சியில், வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி மற்றும் உதவி வேளாண் இயக்குனர் ரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...