விவியன்‌ ரிச்சர்ட்ஸிற்கு பிறகு தோனியே ஸ்டைலான ஆட்டக்காரர்‌ - நெட்டிசன்களின்‌ கேள்விகளுக்கு சத்குரு பதில்‌!

மே 1 ஆம் தேதி நேற்று நடந்த ட்விட்டர் கலந்துரையாடல், #AMAwithSadhguru நிகழ்ச்சியின் போது, நெட்டிசன்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.



கோவை: மண்‌ வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள்‌ சட்டங்கள்‌ இயற்ற வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி சத்குரு 100 நாட்களுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார்‌ சைக்கிள்‌ பயணம்‌ மேற்கொண்டுள்ளார்‌. ஐரோப்பா நாடுகளில்‌ பயணத்தை நிறைவு செய்துள்ள அவர்‌ தற்போது மத்திய கிழக்கு நாடுகளில்‌ பயணம்‌ செய்து வருகிறார்‌. 

இந்த நிலையில், தனது பிஸியான பயணத்துற்கு இடையே டுவிட்டரில்‌ நடந்த #AMAwithSadhguru “என்னிடம்‌ என்ன வேண்டுமானால்‌ கேளுங்கள்‌' என்ற ஹாஸ்‌ டேக்கில்‌, கேள்வி - பதில்‌ நிகழ்வில்‌ பங்கேற்று நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று (மே 1), ட்விட்டரில்‌ நடந்த சத்குருவுடனான கேள்வி பதில்‌ பதிவுகள்‌ இந்திய அளவில்‌ டிரெண்டாகியுள்ளது. 

'உங்களை கிண்டல்‌ செய்யும்‌ ட்ரோலர்களிடம்‌ உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம்‌ என்ன?, ’பைக்‌ ஓட்டும்‌ போது என்ன மாதிரியான யோகா செய்கிறீர்கள்‌?' உங்களுக்கு மிகவும்‌ பிடித்த கிரிக்கெட்‌ வீரர்‌ யார்‌?' நீங்கள்‌ சுடும்‌ தோசையை என்‌ கணவர்‌ சாப்பிட விரும்புகிறார்‌, எப்போது அது நடக்கும்‌?'... இப்படி ரக ரகமான கேள்விகளுக்கு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன்‌ சத்குரு பதில் அளித்தார். 

அதில்‌, சில சுவராஸ்யமான கேள்வி பதில்கள்‌ இதோ: 

உங்களுக்கு எப்போதும்‌ பிடித்த கிரிக்கெட்‌ பேட்ஸ்மேன்‌ யார்‌?

சத்குரு: விவியன்‌ ரிச்சர்ட்ஸ்‌. தற்போதைய, தலைமுறையில்‌ தோனி மட்டுமே அவரை போல்‌ ஸ்டைலாக சிக்ஸர்கள்‌ விளாசும்‌ திறனை கொண்டுள்ளார்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520684808120143878 ?t=Uxs4QDnlQYfQ1Vp4YjyBAg&s=19

கேள்வி: சத்குரு நாங்கள்‌ உங்களை எல்லா விதமான செயல்களிலும்‌ பார்த்து வருகிறோம்‌. சமைக்கிறீர்கள்‌, நடனம்‌ ஆடுகிறீர்கள்‌, கொள்கைகளை உருவாக்க செயல்‌ செய்கிறீர்கள்‌...சினிமாவில்‌, உங்களை பார்க்கும்‌ பெருமை எங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

சத்குரு: நான்‌ என்னுடைய வாழ்க்கையை மிகவும்‌ தீவிரமாக வாழ்கிறேன்‌. வாழ்வின்‌ எதார்த்தம்‌ என்னை மிகவும்‌ பங்களிப்போடு பிஸியாக வைத்துள்ளது. ஆகவே, நடிப்பதற்கு எனக்கு நேரமில்லை.

https://twitter.com/SadhguruJV/status/152068 7796469395457 ?t=wjZMYepPGfp9a02RtF4TvA&s=19

விபூதி நாராயண்‌: எல்லா நிகழ்ச்சிகளுக்கும்‌ எப்படி சரியான நேரத்திற்கு நீங்கள்‌ செல்கிறீர்கள்‌? எல்லா வழிகளில்‌ முயற்சித்தாலும்‌, என்னால்‌ சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு செல்ல முடியவில்லை.

சத்குரு: ஒரு விஷயம்‌ உங்களுக்கு மிகவும்‌ முக்கியமானதாக இருந்தால்‌ நீங்கள்‌ அங்கு எப்போதும்‌ சரியான நேரத்தில்‌ இருப்பீர்கள்‌. வாழ்வில்‌, உங்களுக்கு முக்கியம்‌ என்று தோன்றாத எதையும்‌ நீங்கள்‌ செய்யாதீர்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520684067275960320?t=i5 TAWjteEFIZbgUCSSj9yg&s=19

ஆனந்த்‌ ஹரிதாஸ்‌: சத்குரு, உங்களை கிண்டல்‌ செய்யும்‌ நபர்களிடம்‌ (ட்ரோலர்கள்‌) நீங்கள்‌ விரும்பும்‌ ஒரு விஷயம்‌ என்ன?

சத்குரு: நான்‌ பேசும்‌ ஒவ்வொரு வார்த்தையையும்‌ அவர்கள்‌ கவனிக்கிறார்கள்‌. அந்த உறுதி தான்‌. இந்த நேரத்தில் நீங்கள்‌ என்னை எந்தளவுக்கு கிண்டல்‌ செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்‌. ஆனால்‌, மண்‌ வளத்தை பாதுகாப்பதில்‌ உங்களுக்கு இருக்கும்‌ அக்கறையை கொஞ்சம்‌ வெளிப்படுத்துங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520688065890504704?t=M_Bm/7lofllzoaZmnVGi-Pg&s=19

தீக்ஷா: தொடர்ந்து பைக்கு ஓட்டும்‌ போது ஏற்படும்‌ அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்‌? எங்கு சென்றாலும்‌, எல்லோரிடமும்‌ சிரித்த முகத்துடன்‌ எப்படி உற்சாகம்‌ அளிக்கிறீர்கள்‌?

சத்குரு: என்‌ உடலில்‌ ஏற்படும்‌ வலியால்‌ என்‌ முகத்தில்‌ தோன்றும்‌ புன்னகையை ஒன்றும்‌ செய்ய முடியாது. ஏனென்றால்‌, அது வேறு ஒரு மூலத்தில்‌ இருந்து வருகிறது. இன்னும்‌ ஆழமாக தேடுங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/152068 7230888693761 ?t=4_WTEsOSJBaD-FO_MUc07Q&s=19

ரவிகாந்த்‌: இந்த 100 நாட்களுக்கு பிறகும்‌ மண்‌ காப்போம்‌ என்ற செய்தியை எப்படி உயிர்ப்புடன்‌ வைத்திருப்பது? அடுத்த 10 முதல்‌ 15 வருடங்களில்‌ களத்தில்‌ செயல்‌ நடப்பதற்கும்‌ அதற்கு தேவையான கொள்கைகள்‌ உருவாக்கவும்‌ நாங்கள்‌ எப்படி பங்காற்றுவது?

சத்குரு: பொறுப்பான குடிமக்கள்‌ அனைவரும்‌ சட்டமன்ற மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, முதல்வர்கள்‌, நாட்டின்‌ பிரதமர்கள்‌ இதை மறக்காமல்‌ இருப்பதை உறுதி செய்ய கடிதங்கள்‌ எழுதுங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520688648328552448 Pt=LxT800fvl8YtZYOjuS5szhQ&s=19 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...