விவியன்‌ ரிச்சர்ட்ஸிற்கு பிறகு தோனியே ஸ்டைலான ஆட்டக்காரர்‌ - நெட்டிசன்களின்‌ கேள்விகளுக்கு சத்குரு பதில்‌!

மே 1 ஆம் தேதி நேற்று நடந்த ட்விட்டர் கலந்துரையாடல், #AMAwithSadhguru நிகழ்ச்சியின் போது, நெட்டிசன்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.



கோவை: மண்‌ வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள்‌ சட்டங்கள்‌ இயற்ற வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி சத்குரு 100 நாட்களுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார்‌ சைக்கிள்‌ பயணம்‌ மேற்கொண்டுள்ளார்‌. ஐரோப்பா நாடுகளில்‌ பயணத்தை நிறைவு செய்துள்ள அவர்‌ தற்போது மத்திய கிழக்கு நாடுகளில்‌ பயணம்‌ செய்து வருகிறார்‌. 

இந்த நிலையில், தனது பிஸியான பயணத்துற்கு இடையே டுவிட்டரில்‌ நடந்த #AMAwithSadhguru “என்னிடம்‌ என்ன வேண்டுமானால்‌ கேளுங்கள்‌' என்ற ஹாஸ்‌ டேக்கில்‌, கேள்வி - பதில்‌ நிகழ்வில்‌ பங்கேற்று நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று (மே 1), ட்விட்டரில்‌ நடந்த சத்குருவுடனான கேள்வி பதில்‌ பதிவுகள்‌ இந்திய அளவில்‌ டிரெண்டாகியுள்ளது. 

'உங்களை கிண்டல்‌ செய்யும்‌ ட்ரோலர்களிடம்‌ உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம்‌ என்ன?, ’பைக்‌ ஓட்டும்‌ போது என்ன மாதிரியான யோகா செய்கிறீர்கள்‌?' உங்களுக்கு மிகவும்‌ பிடித்த கிரிக்கெட்‌ வீரர்‌ யார்‌?' நீங்கள்‌ சுடும்‌ தோசையை என்‌ கணவர்‌ சாப்பிட விரும்புகிறார்‌, எப்போது அது நடக்கும்‌?'... இப்படி ரக ரகமான கேள்விகளுக்கு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன்‌ சத்குரு பதில் அளித்தார். 

அதில்‌, சில சுவராஸ்யமான கேள்வி பதில்கள்‌ இதோ: 

உங்களுக்கு எப்போதும்‌ பிடித்த கிரிக்கெட்‌ பேட்ஸ்மேன்‌ யார்‌?

சத்குரு: விவியன்‌ ரிச்சர்ட்ஸ்‌. தற்போதைய, தலைமுறையில்‌ தோனி மட்டுமே அவரை போல்‌ ஸ்டைலாக சிக்ஸர்கள்‌ விளாசும்‌ திறனை கொண்டுள்ளார்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520684808120143878 ?t=Uxs4QDnlQYfQ1Vp4YjyBAg&s=19

கேள்வி: சத்குரு நாங்கள்‌ உங்களை எல்லா விதமான செயல்களிலும்‌ பார்த்து வருகிறோம்‌. சமைக்கிறீர்கள்‌, நடனம்‌ ஆடுகிறீர்கள்‌, கொள்கைகளை உருவாக்க செயல்‌ செய்கிறீர்கள்‌...சினிமாவில்‌, உங்களை பார்க்கும்‌ பெருமை எங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

சத்குரு: நான்‌ என்னுடைய வாழ்க்கையை மிகவும்‌ தீவிரமாக வாழ்கிறேன்‌. வாழ்வின்‌ எதார்த்தம்‌ என்னை மிகவும்‌ பங்களிப்போடு பிஸியாக வைத்துள்ளது. ஆகவே, நடிப்பதற்கு எனக்கு நேரமில்லை.

https://twitter.com/SadhguruJV/status/152068 7796469395457 ?t=wjZMYepPGfp9a02RtF4TvA&s=19

விபூதி நாராயண்‌: எல்லா நிகழ்ச்சிகளுக்கும்‌ எப்படி சரியான நேரத்திற்கு நீங்கள்‌ செல்கிறீர்கள்‌? எல்லா வழிகளில்‌ முயற்சித்தாலும்‌, என்னால்‌ சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு செல்ல முடியவில்லை.

சத்குரு: ஒரு விஷயம்‌ உங்களுக்கு மிகவும்‌ முக்கியமானதாக இருந்தால்‌ நீங்கள்‌ அங்கு எப்போதும்‌ சரியான நேரத்தில்‌ இருப்பீர்கள்‌. வாழ்வில்‌, உங்களுக்கு முக்கியம்‌ என்று தோன்றாத எதையும்‌ நீங்கள்‌ செய்யாதீர்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520684067275960320?t=i5 TAWjteEFIZbgUCSSj9yg&s=19

ஆனந்த்‌ ஹரிதாஸ்‌: சத்குரு, உங்களை கிண்டல்‌ செய்யும்‌ நபர்களிடம்‌ (ட்ரோலர்கள்‌) நீங்கள்‌ விரும்பும்‌ ஒரு விஷயம்‌ என்ன?

சத்குரு: நான்‌ பேசும்‌ ஒவ்வொரு வார்த்தையையும்‌ அவர்கள்‌ கவனிக்கிறார்கள்‌. அந்த உறுதி தான்‌. இந்த நேரத்தில் நீங்கள்‌ என்னை எந்தளவுக்கு கிண்டல்‌ செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்‌. ஆனால்‌, மண்‌ வளத்தை பாதுகாப்பதில்‌ உங்களுக்கு இருக்கும்‌ அக்கறையை கொஞ்சம்‌ வெளிப்படுத்துங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520688065890504704?t=M_Bm/7lofllzoaZmnVGi-Pg&s=19

தீக்ஷா: தொடர்ந்து பைக்கு ஓட்டும்‌ போது ஏற்படும்‌ அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்‌? எங்கு சென்றாலும்‌, எல்லோரிடமும்‌ சிரித்த முகத்துடன்‌ எப்படி உற்சாகம்‌ அளிக்கிறீர்கள்‌?

சத்குரு: என்‌ உடலில்‌ ஏற்படும்‌ வலியால்‌ என்‌ முகத்தில்‌ தோன்றும்‌ புன்னகையை ஒன்றும்‌ செய்ய முடியாது. ஏனென்றால்‌, அது வேறு ஒரு மூலத்தில்‌ இருந்து வருகிறது. இன்னும்‌ ஆழமாக தேடுங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/152068 7230888693761 ?t=4_WTEsOSJBaD-FO_MUc07Q&s=19

ரவிகாந்த்‌: இந்த 100 நாட்களுக்கு பிறகும்‌ மண்‌ காப்போம்‌ என்ற செய்தியை எப்படி உயிர்ப்புடன்‌ வைத்திருப்பது? அடுத்த 10 முதல்‌ 15 வருடங்களில்‌ களத்தில்‌ செயல்‌ நடப்பதற்கும்‌ அதற்கு தேவையான கொள்கைகள்‌ உருவாக்கவும்‌ நாங்கள்‌ எப்படி பங்காற்றுவது?

சத்குரு: பொறுப்பான குடிமக்கள்‌ அனைவரும்‌ சட்டமன்ற மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, முதல்வர்கள்‌, நாட்டின்‌ பிரதமர்கள்‌ இதை மறக்காமல்‌ இருப்பதை உறுதி செய்ய கடிதங்கள்‌ எழுதுங்கள்‌.

https://twitter.com/SadhguruJV/status/1520688648328552448 Pt=LxT800fvl8YtZYOjuS5szhQ&s=19 

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...