தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC-பட்டியலில் சேர்த்திட வேண்டும் - கோவையில் அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டம்..!

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை SC-பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி OBC-பிரிவில் சேர்த்திட வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC-பட்டியலில் சேர்த்திட வேண்டும் என அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை SC பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி OBC பிரிவில் சேர்த்து இட வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மள்ளர் எழுச்சிப் பேரவை தலைவர் மனுநீதிச் சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ௫௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனு நீதி சோழன், இதற்கு முன்பாகவே தேவேந்திர குல வேளாளர் சமூகம்OBC பட்டியலில்தான் இருந்ததாகவும், ௧௯௩௬/ல் SC பட்டியலுக்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து ஓராண்டிற்கு முன்பு மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு இது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்தும் மாநில அரசு கடந்த 8 மாதங்களாக மாநில அரசுஎவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.



இதனால் SC பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படுமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து சமூகத்தினருக்கும் சலுகைகள் வழங்ப்பட்டுதான் வருவதாகவும் SC பட்டியல் மக்கள் உயர் பதவிகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்றும் எனவே தங்களை முன்பிருந்தவாரே OBC பட்டியலில் சேர்க்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் இந்திரசேனா அமைப்பினரும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...