'களை கட்டியது வால்பாறை': சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு..!

தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.


கோவை: மே தின விடுமுறையையொட்டி, வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டனர்.

தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.

வால்பாறையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்வதால், தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது.

ஓடை, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சமவெளிப்பகுதியில், கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வால்பாறை சீதோஷ்ண நிலை கவர்ந்ததால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதியது. வால்பாறையில் இருந்து, 3-கி.மீ., தொலைவில் உள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆறு.

ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்தனர். குடும்பத்துடன் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியர் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.இந்தப் பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோன்று, வால்பாறையில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...