'களை கட்டியது வால்பாறை': சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு..!

தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.


கோவை: மே தின விடுமுறையையொட்டி, வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டனர்.

தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.

வால்பாறையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்வதால், தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது.

ஓடை, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சமவெளிப்பகுதியில், கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வால்பாறை சீதோஷ்ண நிலை கவர்ந்ததால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதியது. வால்பாறையில் இருந்து, 3-கி.மீ., தொலைவில் உள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆறு.

ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்தனர். குடும்பத்துடன் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியர் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.இந்தப் பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோன்று, வால்பாறையில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...