கோவை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை - விசாரணை தேதிகள் அறிவிப்பு…!

சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும். மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால், ஜாமீன் முன்ஜாமீன் மற்றும் அவசரகால வழக்குகள் வாரத்தில் ஒருநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கோவை:கோடை காலத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு நீதிமன்றங்கள் மே 31-ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறாது. அதே நேரத்தில், சி.ஜே.எம். நீதிமன்றம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும். மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால், ஜாமீன் முன்ஜாமீன் மற்றும் அவசரகால வழக்குகள் வாரத்தில் ஒருநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக, விடுமுறைகால நீதிமன்றம் செயல்படும். 

கோடைகால நீதிமன்ற வழக்கை விசாரிக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, குற்ற வழக்குகளில் விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2, 9, 16, 23 மற்றும் 27ம் தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு, தாக்கல்செய்யப்படும் மனுக்கள் மீது 5, 12, 19, 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும். 

மேலும், சிவில் வழக்குகளை விசாரிக்க முதன்மை சார்பு நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் வழக்குகளை மே 4, 11, 12, 25 ஆகிய நாட்களில் மனு தாக்கல் செய்யலாம். விசாரணை மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...