வீட்டில் பழுதடைந்து இருந்த குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி (48). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில், பழனிச்சாமி ஆனைமலை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பழுதாகி இருந்த கிணறு மோட்டாரை சரி செய்ய சென்றுள்ளார்.
அப்போது, அதே வீட்டில் பழுதடைந்திருந்த குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டார்.
அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், பழனிச்சாமியை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, அதே வீட்டில் பழுதடைந்திருந்த குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டார்.
அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், பழனிச்சாமியை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.