கோவையில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது - 1246 மது பாட்டில்கள் பறிமுதல்…!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.


கோவை: மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போலி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆனைமலை, காளியாபுரம் கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த சரோஜினி என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரோஜினியை போலீசார் கைது செய்து, அவரது வீட்டில் இருந்த 1246 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...