ஆழியார் அணை நீரில் மூழ்கி - 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (19), தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார். தென்காசி மாவட்டம் கடகம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமர்(22). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இருவரும், அவர்களது நண்பர்கள் ஐந்து பேருடன் இன்று ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், ஆழியாறு அணையின் பின்புறம் சென்று தண்ணீரில் இறங்கி குளித்தபோது, ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட நவீன் குமார் தண்ணீரில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அருகிலிருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.



மேலும், சம்பவம் தொடர்பாக ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, மற்றொரு சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழியார் அணையில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...