ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (19), தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார். தென்காசி மாவட்டம் கடகம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமர்(22). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இருவரும், அவர்களது நண்பர்கள் ஐந்து பேருடன் இன்று ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், ஆழியாறு அணையின் பின்புறம் சென்று தண்ணீரில் இறங்கி குளித்தபோது, ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட நவீன் குமார் தண்ணீரில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அருகிலிருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, மற்றொரு சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழியார் அணையில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருவரும், அவர்களது நண்பர்கள் ஐந்து பேருடன் இன்று ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், ஆழியாறு அணையின் பின்புறம் சென்று தண்ணீரில் இறங்கி குளித்தபோது, ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட நவீன் குமார் தண்ணீரில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அருகிலிருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, மற்றொரு சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழியார் அணையில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.