கோவையில் அடிக்கடி ஏற்படும் சாப்ட்வேர் பிரச்சினை: மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு..!

சாப்ட்வேர் பிரச்சனை, திருத்தி அமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணி முடிந்தும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


கோவை: சாப்ட்வேர் பிரச்சனை, திருத்தி அமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,200-சதுரடி முதல் 1,800-சதுர அடி வரை 100-சதவீத வரி உயர்வும்.

1,801-சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 50-சதவீத சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு 150-சதவீத வரி உயர்வும் கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் சொத்து வரி செலுத்துவதில் சாப்ட்வேர் பிரச்சினை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை காரணமாக சொத்து வரி செலுத்த முடியாமல் உள்ளதாகவும், இதனால் மின் இணைப்பு பெற முடியாமல் நூற்றுக்கணக்கான புதிய குடியிருப்புகள் உள்ளதாக கட்டுமான தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கட்டுமான தொழில்துறையினர் கூறியதாவது:-

தமிழகத்தில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆடம்பர தனி வீடுகள் உள்ளிட்ட கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கிரகப்பிரவேசத்திற்கு தயார் நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

ஆனால் புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது தேவைப்படுகிறது. சொத்து வரி செலுத்துவதற்கு செல்லும் மக்கள் மற்றும் கட்டுமான தொழில் துறையினர் சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை காரணமாக வரி செலுத்த முடியாமல் உள்ளனர்.

தற்காலிக மின் இணைப்பு பயன்படுத்தினால் 'ஷாக்'

கட்டுமான பணி மேற்கொள்ளும் காரணங்களுக்காக மின்வாரிய அலுவலகத்திலிருந்து தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால் மின்வாரியத்திலிருந்து பெறப்பட்டுள்ள தற்காலிக மின் இணைப்பு வைத்துக்கொண்டே கிரகப்பிரவேசம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிரகப் பிரவேசம் முடிந்து பலர் புதிய வீடுகளுக்கு குடிபெயர தயாராக உள்ளனர்.

அவ்வாறு செல்லும் பட்சத்தில் தற்காலிக மின் இணைப்பு பயன்படுத்தினால் இரு மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இப்பிரச்சினை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...