கோவையில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் சீண்டல் - முன்னாள் விமானப்படை அதிகாரி போக்சோவில் கைது…..!

அந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 54 வயது முன்னாள் விமான படை வீரர், இந்திய விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஒய்வு பெற்ற அதிகாரி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது, மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர், அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் விமானப்படை அதிகாரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 10 வயதான அந்த குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல் சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.

குழந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி சார்பாக கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இதில், குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிவந்ததைத் தொடர்ந்து முன்னாள் விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...