அந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 54 வயது முன்னாள் விமான படை வீரர், இந்திய விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஒய்வு பெற்ற அதிகாரி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது, மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.
இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர், அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் விமானப்படை அதிகாரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 10 வயதான அந்த குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல் சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.
குழந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி சார்பாக கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இதில், குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிவந்ததைத் தொடர்ந்து முன்னாள் விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர், அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் விமானப்படை அதிகாரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 10 வயதான அந்த குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல் சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.
குழந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி சார்பாக கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இதில், குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிவந்ததைத் தொடர்ந்து முன்னாள் விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.