சட்டப்பேரவையில் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம்- கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார். அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.



கோவை: புலியகுளம் பகுதியில் "நலம்" இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.



பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.



தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோன். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்.



அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. அதனைக் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். சபைகுறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துக்களை விட்டுவிட்டு அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டும்.

இலங்கைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்றும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பெண் தொழில் முனைவோர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...