சட்டப்பேரவையில் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம்- கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார். அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.



கோவை: புலியகுளம் பகுதியில் "நலம்" இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.



பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.



தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோன். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்.



அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. அதனைக் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். சபைகுறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துக்களை விட்டுவிட்டு அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டும்.

இலங்கைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்றும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பெண் தொழில் முனைவோர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...