கோவை 24-மணி நேர குடிநீர் திட்டத்திற்கு 2-கோடி மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 24-மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.
இப்பணிக்கான பூமி பூஜையில், மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார்.
இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பில்லூர் 1, திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம் 12-மற்றும், 19-வது வார்டுக்கு உட்பட்ட சதர்சன் அவின்யூ, அருணா லே அவுட், அபிராமி நகர், லட்சுமி தோட்டம், கிருபா இல்லம், ராக்காட்சி கார்டன் பகுதிகளில் உள்ள, 3221-இணைப்புகள் மூலம் பொதுமக்கள் பயன் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையர் சர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் அஞ்சுகம் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.