கோவை ஈஷாவின்‌ வழிகாட்டுதலில்‌ இயங்கும்‌ ஸ்ரீவேலாயுதசாமி எஃப்‌.பி.ஏ.வின்‌ தேங்காய்‌ விற்பனை தொடக்கம்..!

ஈஷா அவுட்ரீச் அமைப்பின்‌ வழிகாட்டுதலில்‌ இயங்கும்‌ ஸ்ரீவேலாயுதசாமி எஃப்‌.பி.ஏ.வின்‌ தேங்காய்‌ விற்பனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.


கோவை: ஈஷா அவுட்ரீச்‌ அமைப்பின்‌ வழிகாட்டுதலில்‌ செயல்படும்‌ ஸ்ரீவேலாயுதசாமி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்.‌ தனது முதல்‌ விற்பனையை (ஏப்ரல்‌ 29) வெற்றிகரமாக தொடங்கியது.



இந்நிறுவனத்தின்‌ இயக்குநர்களில்‌ ஒருவரும்‌ விவசாயியுமான புனிதன்‌ கோட்டத்தில்‌ விளைந்த ரூ.2.5 லட்சம்‌ மதிப்புமிக்க 10 டன்‌ தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பும்‌ நிகழ்ச்சி கிணத்துக்கடவில்‌ (ஏப்ரல்‌ 29) நடைபெற்றது.

இதில்‌ கோவை மாவட்ட ரோட்டரி கவனர்‌ ராஜசேகரன்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்‌ அவர்‌ பேசுகையில்‌, “இந்தியாவில்‌ மொத்தம்‌ 10 ஆயிரம்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ உள்ளன.

அதில்‌ 50-சதவீதம்‌ நிறுவனங்கள்‌ மஹாராஸ்டிரா மாநிலத்தில்‌ உள்ளன. அதற்கு அடுத்த‌ படியாக சுமார்‌ 700-உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ நம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளன. இந்த எண்ணிக்கையை நாம்‌ இன்னும்‌ அதிகரிக்க வேண்டும்‌.

ஈஷாவின்‌ வழிகாட்டுதலில்‌ தொண்டாமுத்தூரில்‌ தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாறில அரசின்‌ விருதையும்‌ பெற்றுள்ளது. அதேபோல்‌, ஸ்ரீ வேலாயுதசாமி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ நன்கு வளர்ச்சி அடைந்து பல சாதனைகளை புரிய வேண்டும்‌. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்‌” என்றார்‌.

இந்நிகழ்ச்சியில்,‌ ஸ்ரீ வேலாயுதசாமி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ நாராயணசாமி, வெள்ளியங்கிரி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ குமார்‌, ரோட்டரி சங்க செயலாளர்‌ ஸ்ரீராம்‌ உள்ளிட்டோரும்‌ பங்கேற்றனர்‌. கடந்த ஜனவரி மாதம்‌ தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில்‌ கிணத்துக்கடவு பகுதியைச்‌ சேர்ந்த 351 விவசாயிகள்‌ உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...