பொள்ளாச்சி அருகே சமையல் சிலிண்டர்கள் வெடித்து விபத்து - இளைஞர் 60 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

தீ விபத்தில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால், வீட்டில் இருந்த சுமார் 5 சமையல் சிலிண்டர்களில் 2 சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், உள்ளே இருந்த கிருஷ்ணன் உடலிலும் தீ பிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தனூர் பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருக்கு கிருஷ்ணன் (27) அஜித்குமார் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில், கிருஷ்ணன் பொள்ளாச்சி ஜமீன்முத்தூர் தனியார் தோட்டத்தில் வாடகை வீட்டில் தங்கி பழைய துணிகளை தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் அவர் சமைத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த வேஸ்ட் துணியில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. தீ மளமளவென பரவியதால், துணிக் கழிவுகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து உள்ளது.



மேலும், வீட்டில் சுமார் 5 சமையல் சிலிண்டர்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த தீவிபத்தில் அதிக வெப்பத்தால் 2 சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், உள்ளே இருந்த கிருஷ்ணன் உடலிலும் தீ பிடித்துள்ளது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சென்று கிருஷ்ணனின் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர், விரைந்து வந்த தீயணைப்பு துறையை தீயை அணைத்து உள்ளே இருந்த சிலிண்டர்களை வெளியே அகற்றினர். இந்த தீவிபத்தில் வீடு முழுமையான எரிந்தது. மேலும், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...