கோவை மாநகராட்சிக்கு புதிதாக 275 குப்பை சேகரிப்பு வாகனங்கள் - மேற்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் அறிவிப்பு

இக்கூட்டத்தில், பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பிரச்சனை என்பது தொடர்கதையாகவே உள்ளது என்பதை முன்வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தின் கூட்டம், மேற்கு மண்டல அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தலைமையில் இன்று நடைப்பெற்றது.



கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல உதவி ஆணையர், உதவி நிர்வாகப் பொறியாளர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், அவரவர் வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர். இருந்த போதும், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலுமே சுகாதார பிரச்சனை என்பது தொடர்கதையாகவே உள்ளது என்று பங்கேற்ற அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், முன்வைத்தனர்.



அதற்கு பதிலளித்த, மேற்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் பதில் அளித்தபோது, கோவை மாநகராட்சிக்கு புதிதாக 275 குப்பை சேகரிப்பு டெம்போ கொடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில், 105 டெம்போக்கள் புதிதாக தற்போது வாங்கப்படவுள்ளது, என்றார்.

அவருடைய பதிலுக்கு கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள், தினசரி கழிவுகளை எவ்வாறு டெம்போ மூலம் அகற்ற முடியும். குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளுக்கு எப்படி டெம்போ மூலம் குப்பைகளை வாங்க முடியும்? அனைத்து தெருக்களும் சிறிதாக உள்ளதால், இது கடினமான செயலாகவே இருக்கும், என்றனர்.

எனவே, தள்ளுவண்டி என்பதே குப்பை சேகரிப்புகளுக்கு தகுந்த வாகனமாக இருக்கும், எனவும் தெரிவித்தனர். ஆகையால், முறையாக அனைத்து தெருக்களில் இருந்தும் குப்பைகளை அகற்ற தள்ளுவண்டி தேவை, என்பதை முன்வைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...