29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதனை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் பல காலமாக சரி செய்யப்படாமல் இருந்த குடிநீர் குழாயின் பழுது இன்று சரி செய்யப்பட்டது.
நேற்று கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு அருகில் உள்ள முக்கிய குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு இருந்தது. இது குறித்துப் பல முறை புகார்கள் மக்கள் இடத்திலிருந்து கூறப்பட்டு வந்த நிலையில், இவை பல காலமாக சரி செய்யப்படாமல் இருப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் விவாதித்தனர்.
அப்போது வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட உதவி பொறியாளர் அதை உடனடியாக சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, தற்போது அந்த வேலை இன்று அதிகாலை முடிவடைந்து அப்பகுதியில் பழுதடைந்த குழாய் சரி செய்யப்பட்டது. 29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யா மருத்துவமனை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.

அதை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.

நேற்று கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு அருகில் உள்ள முக்கிய குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு இருந்தது. இது குறித்துப் பல முறை புகார்கள் மக்கள் இடத்திலிருந்து கூறப்பட்டு வந்த நிலையில், இவை பல காலமாக சரி செய்யப்படாமல் இருப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் விவாதித்தனர்.
அப்போது வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட உதவி பொறியாளர் அதை உடனடியாக சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, தற்போது அந்த வேலை இன்று அதிகாலை முடிவடைந்து அப்பகுதியில் பழுதடைந்த குழாய் சரி செய்யப்பட்டது. 29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யா மருத்துவமனை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.
அதை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.