கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் நீண்ட கால குடிநீர் குழாய் பழுது சரி செய்யப்பட்டது..!

29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதனை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் பல காலமாக சரி செய்யப்படாமல் இருந்த குடிநீர் குழாயின் பழுது இன்று சரி செய்யப்பட்டது.

நேற்று கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு அருகில் உள்ள முக்கிய குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு இருந்தது. இது குறித்துப் பல முறை புகார்கள் மக்கள் இடத்திலிருந்து கூறப்பட்டு வந்த நிலையில், இவை பல காலமாக சரி செய்யப்படாமல் இருப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் விவாதித்தனர்.

அப்போது வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட உதவி பொறியாளர் அதை உடனடியாக சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



அதனை தொடர்ந்து, தற்போது அந்த வேலை இன்று அதிகாலை முடிவடைந்து அப்பகுதியில் பழுதடைந்த குழாய் சரி செய்யப்பட்டது. 29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யா மருத்துவமனை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.



அதை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...