துப்புரவு பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு கோவை மேயர் உத்தரவு..!

தெற்கு மண்டலம் மிக மோசமான நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை ஆகையால், கோவை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.


கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு பிறப்பித்தார்.



இன்று நடைபெற்ற கோவை தெற்கு மண்டல கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கூறியதாவது:-

78-வது வார்டில் ஒன்றை மாத காலமாக துப்புரவுப் பணியாளருக்கான மேஸ்திரி இல்லாத நிலை உள்ளது. 78-வது வார்டுக்கு உட்பட்ட 14-துப்புரவு பணியாளர்கள் பக்கத்து வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், உங்கள் வார்டுகளில் குப்பை அகற்றுவதற்கான ஆட்கள் இல்லை நீங்கள் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று மக்களிடத்தில் துப்புரவுப் பணியாளர்கள் கூறிவருகின்றனர்.

நிரந்தர பணியாளர்கள் 29-நபர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 3-நபர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களைக் கொண்டு எவ்வாறு கழிவுகளை அகற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதிகாரிகள், பக்கத்து வார்டுகளில் இருந்து அனைத்தையும் உங்களுக்குச் செய்து தருகிறேன் என்று கூறுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று அதிகாரியை சுட்டிக்காட்டினர். எங்கள் பகுதியில், தினமும் 8-துப்புரவுப் பணியாளர்கள் விடுப்பு எடுக்கின்றனர்.

இவை அனைத்தையும் கேட்டறிந்த மேயர் கூறியதாவது:-

தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என்று மேயர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து, தெற்கு மண்டலம் மிக மோசமான நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை ஆகையால் கோவை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...