கோவையில் பெ.நா.பாளையத்தில் வீட்டில் ஆள் இருக்கும் போதே வீடு புகுந்து நகை திருட்டு

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜி.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி.

நேற்று இரவு, இவரது, தாய் வள்ளியம்மாள் வீட்டின் முன்பகுதியிலும், அய்யாசாமியின் மனைவி கலாமணி வீட்டில் உள்ள ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவு அடைக்காமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, சத்தம் கேட்டு எழுந்த கலாமணி அந்த மர்ம நபரை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இச்சம்பவம், குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...