நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜி.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி.
நேற்று இரவு, இவரது, தாய் வள்ளியம்மாள் வீட்டின் முன்பகுதியிலும், அய்யாசாமியின் மனைவி கலாமணி வீட்டில் உள்ள ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவு அடைக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது, சத்தம் கேட்டு எழுந்த கலாமணி அந்த மர்ம நபரை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இச்சம்பவம், குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நேற்று இரவு, இவரது, தாய் வள்ளியம்மாள் வீட்டின் முன்பகுதியிலும், அய்யாசாமியின் மனைவி கலாமணி வீட்டில் உள்ள ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவு அடைக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது, சத்தம் கேட்டு எழுந்த கலாமணி அந்த மர்ம நபரை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இச்சம்பவம், குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.