கோவை வால்பாறை நகராட்சி நகரமன்ற உறுப்பினர் மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்..!

டாடா காபி எஸ்டேட் பகுதியில் அரசு அறிவுறுத்தல் படி மக்கும் குப்பை, மற்றும் மக்காத குப்பைகள் சேர்த்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதை நகராட்சி ஊழியர்களால் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தது.


கோவை: வால்பாறைநகராட்சி நகரமன்ற உறுப்பினர் மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிஉட்பட 21-வார்டுகள் உள்ளது.இதில் 9,10-அட்டகட்டி, வால்பாறை ஆகிய வார்டுகள் தவிர அனைத்தும் தனியார் எஸ்டேட் பகுதிக்கு சொந்தமான இடமாகும்.

இதில், நகராட்சி சார்பாக வேலைகள் செய்வதற்கு எஸ்டேட் நிர்வாகம் சில நேரங்களில் தடையாக இருப்பதாகவும், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுமை படுத்தவும், மின் விளக்குகள் அமைத்தல் மின் கோபுரங்கள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு எஸ்டேட் நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகளை அரசுக்கு கொடுத்தல், அதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்புதல் வழங்க படிவம் வழங்கி அதை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தண்ணீர் தொட்டி பேருந்து நிலையம் போன்றவைகளை பராமரிக்க நிர்வாகம் ஒப்புதல் செய்ய வேண்டும், டாடா காபி எஸ்டேட் பகுதியில் அரசு அறிவுறுத்தல் செய்யப்பட படி மக்கும் குப்பை, மற்றும் மக்கா குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டுஉள்ளதாகவும், அதை நகராட்சி ஊழியர்களால் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், அனைத்து எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்உள்ளதால் வனவிலங்கு மோதல் தடுக்க மின் விலக்கு அமைக்க வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...