கோவை திருமலையம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை - இருவர் கைது…!

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் மதுக்கரையை சேர்ந்த பிரபாகர் (26). அஜித்குமார் (25) என்பதும், அவர்கள் இருவரும் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவரிடம் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவை திருமலையம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்ததை அடுத்து, கே.ஜி சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பாலக்காடு சாலை திருமலையம்பாளையம் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு நபர்களை, பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 350 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை அழைத்து சென்று சோதனை செய்த போது மேலும் 1.1 கிலோ கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் மதுக்கரையை சேர்ந்த பிரபாகர் (26). அஜித்குமார் (25) என்பதும், அவர்கள் இருவரும் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவரிடம் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அதனை இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த கே.ஜி. சாவடி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...