தூய்மை பணியாளர்கள் வருகை பதிவை வார்டு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் - கோவை மேயர் உத்தரவு..!

தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை நாம் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதையும் தாண்டி பணிக்கு வராதவர்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.



குறிப்பாக குடிநீர், மற்றும் சாலை சீரமைப்பு, தூய்மை பணிகள் குறித்து தெரிவித்தனர். அதில் பிரதானமான உறுப்பினர்கள் கூறும்போது, தங்கள் வார்டுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும், பெரும்பாலானோர் பணிகள் செய்வது இல்லை எனவும் புகார் அளித்தனர்.

அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசும் போது,பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டு தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவை பார்ப்பதில்லை. பல்வேறு வார்டுகளில் சில தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவில் கையெழுத்திட்டு விட்டு பணிக்கு செல்வதில்லை.

எனவே அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை காலையில் நேரில் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். எனது வார்டில் நான் தினமும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை கண்காணித்து வருகிறேன்.

இதை பெருமைக்காக சொல்லவில்லை, தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை நாம் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதையும் தாண்டி பணிக்கு வராதவர்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...