ஆமை வேகத்தில் மெதுவாக சுமார் 2-மாதமாக இழுத்தடித்து ஒரு வழியாக மேற்கூரை முற்றிலுமாக அகற்றி உள்ளனர். இது இடிக்கப்பட்டு 2 தினங்கள் ஆகியும், கட்டிட கழிவுகள் அகற்றாமல் அதே பகுதியில் போட்டு வைத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை கடந்த 2-மாதமாக ஆமை வேக பணியில் முழுமையாக அகற்றியுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் உள்ள மூன்று தளங்களில்,சமூக நலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, குழந்தைகள் நலத்துறை, இ-சேவை மையம்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் அண்மையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பழுதடைந்து மோசமாக இருந்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மேற்கூரையை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 6ஆம் தேதி அங்கு ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, மேற்கூரை மிகவும் வலுவிழந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. மேற்கூரையின் ஒரு பகுதியில் இடித்த போது, திடீரென மேற்கூரையில் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் இடிந்து கீழே விழுந்தது.
இதையடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் விலகி நின்றவாறு சிமெண்ட் காரைகளை அகற்றினார். அதே போல் மேற்கூரைக்கு தூண்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், கம்பிகளும் மோசமாக இருந்தது.
அதை தொடர்ந்து ஆமை வேகத்தில் மெதுவாக மேற்கூரையை சுமார் 2 மாதமாக இழுத்தடித்து ஒரு வழியாக மேற்கூரை முற்றிலுமாக அகற்றி உள்ளனர். இந்த மேற்கூரை இடிக்கப்பட்டு 2 தினங்கள் ஆகியும் இது அந்த கட்டிட கழிவுகளை அகற்றாமல் இப்போது வரை அதே பகுதியில் போட்டு வைத்துள்ளனர்.