சமீப காலமாக பள்ளி மாணவர்கள் இது போன்று செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது
கோவை: கோவை கோவையில் அரசுபள்ளி மாணவர்கள் சாலையில் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் இரு தினங்களுக்கு முன்அரசு பள்ளி மாணவர்கள்இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டுள்ளனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பேருந்து நிறுத்ததில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் நின்று கொண்டு இருந்த போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் மோதிக் கொண்டதால் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துஒதுங்கி நின்றனர். மாணவர்கள், இரு பிரிவினர்களாக பிரிந்து தாக்கிக் கொண்டதைசாலையில்காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
மேலும், மோதல் நடந்த போதே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பள்ளி மாணவர்கள் இது போன்று செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.