கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ் கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன கருவிகளுடன் கூடிய பேருந்து அறிமுகம்

ஆரம்ப கால மார்பக புற்றுநோய்‌ மற்றும்‌ சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத பிரச்சினைகளை கண்டறிய நவீன கருவிகளுடன்‌ கூடிய பேருந்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையும்,‌ கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ்‌ கிளப், இணைந்து மார்பக புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய தரம் வாய்ந்த ஹோலோஜிக் மேமோகிராபி (Hologic Mammography) பிராஜக்ட்‌ சக்தி (Project Shakti) மற்றும் சர்க்கரை நோய் பாத பிரச்சினைகளை அரம்பத்தில்‌ கண்டறிந்து கால் இழப்பை தடுத்தல் (Project Walk For Life) ஆகிய இந்த இரு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்காக அதிநவீன கருவிகள்‌ கொண்ட பேருந்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் இவ்விரு திட்டத்தையும் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Project Shakti, குறித்து கங்கா மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்‌ டாக்டர்‌ ராஜா ஷண்முக கிருஷ்ணன் கூறியதாவது:-

பிராஜக்ட்‌ சக்தியின் (Project Shakti)‌ மூலம்‌ ஆரம்ப கால மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கு சரியான தருணத்தில்‌ மருத்துவ சிகிச்சையளித்து பெண்களின்‌ உயிர்களை காப்பாற்றுவது தான் அதன் நோக்கமாகும். மார்பக புற்றுநோய்‌ பெண்களிடையே, மிக சாதாரணமாக அதிகரித்து வருகிறது. இதை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால்‌ உடனடியாக குணப்படுத்தலாம்‌. ஆனால்‌, இந்தியாவில்‌ அதிக அளவில்‌ மார்பக புற்றுநோய்‌ கடைசி நேரத்தில்‌ கண்டறியப்பட்டு குணப்படுத்த முடியாமல்‌ நோயாளிகள்‌ இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த பிராஜக்ட சக்தி (Project Shakti) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில்‌, அதிநவீன கருவிகள்‌ கொண்ட இந்த பேருந்தின்‌ மூலம்‌ பல இடங்களில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்பட்டு, வருகிற 18 மாதத்தில்‌ 1500 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படும்‌. இதனால்‌, பெண்களிடையே மார்பக புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன்‌, ஆரம்பகால மார்பக புற்றுநோய்‌ பாதித்த நோயாளிகளை கண்டறிய முடியும். இதுதுவிர, இத்திட்டத்தினால்‌ கண்டறியப்படும்‌ நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்‌.

இதில்‌, கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய்‌ நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பரிசோதனைகளான அறுவை சிகிச்சை, கீமோதரபி, ரேடியோதெரபி மற்றும்‌ மார்பக மறுசீரமைப்புகள்‌ செய்யப்படும்‌. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதோடு அவர்களுக்கு இலவச சிகிச்சைகள்‌ அளித்து காப்பாற்றப்படும்‌.

தொடர்ந்து, கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜ சபாபதி “Project Walk for Life” பற்றி விளக்கும்போது கூறியதாவது:-

"Project Walk for Life", திட்டத்தின் மூலம்‌ சர்க்கரை நோயினால்‌ ஏற்படும்‌ பாத புண்களை கணடறிந்து தேவையான சிகிச்சைகளை‌ அளித்து குணப்படுத்துவதால்‌, கால்‌ துண்டிப்புகள்‌ தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோய்‌ இந்தியாவில்‌ அதிக அளவில்‌ உள்ளது. மேலும்‌, சர்க்கரை நோயினால்‌ அவர்களுடைய பாதத்தின்‌ உணர்ச்சிகளை அறிய முடிவதில்லை.

இதனால்‌, அவர்களுடைய கால்‌ புண்ணால் ஏற்படும்‌ வலியை உணராமல்‌, புண்கள்‌ முற்றி கால்‌ துண்டிக்கப்படும்‌ அளவிற்கு செல்கிறது. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ 1800 சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனைகள் செய்து தேவைப்படும்‌ நோயாளிக்கு எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும்.‌ இதில்‌, நோயாளிக்கு கால புண்கள்‌, கண்டறியப்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும்‌ இலவசமாக அளித்து கால் துண்டிப்பு தவிர்க்கப்படும்.



மேலும், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பரத் பாண்டியா, பிரிகால் தலைவர் வனிதா மோகன், மில்கி மிஸ்ட் இயக்குனர் அனிதா சதீஷ்குமார் மற்றும் ரோட்டரியின் சுந்தரவடிவேல் ஆகியோர் உரையாற்றினார்கள்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...