உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் கூட்டங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் கூட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைத்திட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறையினர் ஆய்வு கூட்டம் மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்வதை தவிர்த்து இருசக்கர வாகனங்களை இயக்கும்போது ஹெல்மெட் அணிய வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே விபத்துகள் குறையும். சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்பது எடுத்துரைக்கப்பட்டது.

முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து நிகழும் பொழுது பாதிக்கப்பட்டவரை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி பெறுவதற்கு உதவி செய்யும் பொதுமக்களை பாராட்டும் வகையில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை ஆணையகத்தால் "GOOD SAMARITAN AWARD" வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

இந்த விருதுக்கு தகுதியான நபர்களின் முன்மொழிவுகள் மாவட்ட அளவிலான குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட உள்ளது. நெடுஞ்சாலை துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்தில்லா மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்கிட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.



இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், போக்குவரத்து துணை ஆணையர் உமா, மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர்கள் போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...