பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரதி பார்க் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய துணை தலைவர் சசிகுமார் தலைமையில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் "பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சரி செய்ய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் பிடிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பொருத்துனர் மின் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஊதியக் குறைப்பு செய்து போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 100 கோடி ரூபாய் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்கிட வேண்டும்" என்று பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், "நிதி நிர்வாகச் சீர்கேட்டின் விளைவாக குடிநீர் வடிகால் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதை சரி செய்ய ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வெட்டி குறைக்கிற நடவடிக்கையில் வாரிய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

குடிநீர் உற்பத்தி செலவு கூடியுள்ளதை ஈடுகட்ட தமிழக அரசிடமிருந்து மானியம் பெறாமலும், உள்ளாட்சி அமைப்புகள் வாரியத்திற்கு தர வேண்டிய ரூ.800 கோடி குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்காமல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை சரிபாதியாக வெட்டுகிற அநீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது.



மேலும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை நியமிக்காமல் நியமனம் செய்ததாகக் கூறி முறைகேடாக பில் போட்டு மாதா மாதம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற போலியான பெயரில் இஎஸ்ஐ, இபிஎப் கட்டியதாக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

தேவைக்கேற்ப ஊழியர்கள் நியமிக்காததால் குடிநீர் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி பழுதுகள், உடைப்புகள் என தேவையற்ற செலவுகள் மூலம் வாரியப் பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் மட்டும் சீரான பதவி உயர்வு, 6 மாதத்திற்கு ஒரு முறை பஞ்சப்படி உயர்வு வருடாந்திர ஊதிய உயர்வு, உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் தவறாமல் பெற்று வரும் போது நிதி நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழலால் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்கு ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தான்", என தெரிவித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சம்மேளன தலைவர் பாலகுமார், மாவட்ட தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...