கோவை ராணுவ வீரருக்கு மேகாலயாவில் சிலை..!

ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டேவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் உருவச்சிலை மேகாலயாவில் உள்ள ராணுவ மையத்தில் திறக்கப்பட்டது.

கோவை நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. கடந்த, 93-ம் ஆண்டு காஷ்மீர் சம்சாபாரி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்தது.

உடனடியாக எல்லைப் பகுதிக்கு கென்னடி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் விரைந்தனர். நான்கு பயங்கரவாதிகளை கென்னடி சுட்டு வீழ்த்தினார். முகாமுக்கு திரும்பியபோது பனி பாறைகளுக்கு இடையே கென்னடியின் கால் சிக்கிக்கொண்டது. இதனால், தப்பி ஓடிய பயங்கரவாத கும்பல், கென்னடியை நோக்கி சுட்டது.

இதில், அவர் வீரமரணம் அடைந்தார். கென்னடியின் வீரத்தைப் போற்றி, 'கீர்த்தி சக்ரா' விருது கொடுத்து, இந்திய அரசு கௌரவப்படுத்தியது. அவரது நினைவாக நாயக்கன் பாளையத்தில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

அதில், அவர் பயன்படுத்திய பொருட்கள், ராணுவத்தில் பணியாற்றிய போது பெற்ற பதக்கங்கள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டேவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா நிகழ்ச்சியில், கென்னடியின் குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...