குடிமகன்களே உஷார்.. கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த ஒருவர் பலி..!

கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி, மதுக்கடையில் இருந்த தண்ணீர் கலந்து குடித்த திமுக நிர்வாகி உயிரிழந்ததோடு, மற்றொருவருக்கு கண் பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்ததிமுக பிரமுகர் உயிரிழந்தார்.

கோவை பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (53). அப்பகுதியில் திமுக துணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது நண்பர் சிவா.

சிவா அப்பகுதியின் வார்டு செயலாளராக இருந்து வருகிறார். இருவரும் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றிற்கு மது அருந்த சென்றனர். 1680 என்ற எண்ணிட்ட கடை திறக்கப்படாததால் இருவரும், அருகில் உள்ள மதுபான கூடத்தில் கள்ளச்சந்தையில் மதுவாங்கி அங்கு கேனில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை கலந்து மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய சிறிது நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி ஏற்பட்டதோடு, மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட சிவாவிற்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள செல்வபுரம் போலீசார், கள்ளச்சந்தையில் வாங்கிய மதுவில் கலப்படம் இருந்ததா அல்லது மதுபான கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கலப்படம் நிகழ்ந்துள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 11.30-மணியளவில் மதுபான கடை திறப்பதற்கு முன்பாக கள்ளச்சந்தையில் மதுவாங்கி அருந்திய திமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...