கோவையில் அரசு பள்ளி மாணவ -மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்..!

இரண்டு வருடங்களுக்கு பிறகு கோவையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: HCL பவுண்டேஷன் ஸ்போர்ட்ஸ் ஃபார் சேஞ்ச் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கானவிளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.



கோவையில் மாவட்ட அளவில் 14-வயதிற்குட்பட்ட அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.



தனியார் அமைப்பினர் நடத்திய இந்த போட்டியில் கைப்பந்து, கபடி, கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, எறிபந்து, வளைகோல் பந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிமாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.



இதில் 100-மீட்டர், 200-மீ, 400-மீ, 800-மீ, 1,500-மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும்நடைபெற்றது.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...