இரண்டு வருடங்களுக்கு பிறகு கோவையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை: HCL பவுண்டேஷன் ஸ்போர்ட்ஸ் ஃபார் சேஞ்ச் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கானவிளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கோவையில் மாவட்ட அளவில் 14-வயதிற்குட்பட்ட அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தனியார் அமைப்பினர் நடத்திய இந்த போட்டியில் கைப்பந்து, கபடி, கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, எறிபந்து, வளைகோல் பந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிமாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் 100-மீட்டர், 200-மீ, 400-மீ, 800-மீ, 1,500-மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும்நடைபெற்றது.



கோவையில் மாவட்ட அளவில் 14-வயதிற்குட்பட்ட அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தனியார் அமைப்பினர் நடத்திய இந்த போட்டியில் கைப்பந்து, கபடி, கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, எறிபந்து, வளைகோல் பந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிமாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் 100-மீட்டர், 200-மீ, 400-மீ, 800-மீ, 1,500-மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும்நடைபெற்றது.