கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் இரண்டாவது நாளாக விசாரணை…!

கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், இவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.

ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி, கோடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் நேற்று ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக சஜீவனிடம் தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சஜீவன் கோவையில் நீலகிரி பர்னிச்சர் என்ற பெயரில் மரசாமான்கள் விற்பனை கடையை வைத்திருந்தார். மேலும் அவர் தான் கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவிடமிருந்து கனகராஜ் வேலை விட்டு சென்ற பின் அவருடன் எந்த தொடர்பும் இல்லை சஜீவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...