கோவையில் களைகட்டிய தண்டுமாரியம்மன் கோவில் அக்னி சட்டி ஊர்வலம்..!

சிறப்பு அலங்காரத்தில் இருந்த தண்டுமாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெற்றது.



கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவில் 2022-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.



இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டிகள் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவையின் காவல் தெய்வங்களில் ஒருவராக தண்டுமாரியம்மன் விளங்கி வருவதாக கோவை மக்களால் நம்பப்படுகிறது. சுமார் 200-ஆண்டுகள் பழமை வாய்ந்த காவல் தெய்வமான தண்டு மாரியம்மன் கோவிலில் 2022-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று முக்கிய நிகழ்வாக கோனியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அக்னிச்சட்டி, பூங்கரகம், பால் காவடி மற்றும் அலகு குத்தி, ஒப்பணக்கார வீதி, சிரியன் சர்ச் சாலை, பூரூக் பாண்டு சாலை, நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, வழியாகஅருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.

வரும் வழி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



பின்னர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த தண்டு மாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் இந்த நிகழ்விற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் காளி வேடம் அணிந்து ஊர்வலம் வந்தனர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...