திருப்பூரில் கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் கொள்ளை: பணத்தை பறிகொடுத்த ஏற்றுமதியாளர் வீட்டில் வருமான வரித்துறை விசாரணை..!

தன் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை மட்டுமல்லாது வருமான வரித்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் கொள்ளையடித்த தொழிலாளர்களை கைது செய்த காவல்துறை பணம் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குள்ளே கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் துரைசாமி. திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளாகத்திலேயே இவரது வீடும் உள்ளது. மூன்று மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் அவரது வீட்டில் துரைசாமி மற்றும் மனைவி தனலட்சுமி மட்டுமே வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டுக்கு எதிரே துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. அது பயன்படுத்தப்படாத நிலையில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பழைய வீட்டில் இரண்டு சவரன் நகை ஒன்றரை லட்சம் பணம் கொள்ளை அடிக்க பட்டதாக துரைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ் அவரது தம்பி சக்தி தொழிலாளர்கள் தாமோதரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.



விசாரணையின் போது தான் காவல்துறையினருக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் இவர்களிடமிருந்து 30-சவரன் நகை 16-லட்சம் ரூபாய் பணம் 2-சொகுசு கார் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தும் போது கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக சதீஷ் மற்றும் தொழிலாளர்கள் கட்டிட வேலைக்கு சென்ற போது பழைய வீட்டில் ஒரு அறையில் கட்டுக்கட்டாய் பணம் மூட்டை கட்டி இருந்துள்ளது இதனை கண்டு சிறிதளவு பணத்தை தொழிலாளர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது துரைசாமிக்கு தெரியாமல் இருந்திடவே மீண்டும் இரண்டு முறை இதேபோல் கட்டிட வேலைக்கு சென்ற போது பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மூன்றாவது முறையாக ஜனவரி மாதம் அந்த அறையில் பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த துரைசாமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரில் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் இரண்டு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது தான் சந்தேகம் அடைந்த கட்டட வேலைக்கு வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் மூன்று முறை பணம் கொள்ளை அடித்து இருந்தது தெரிய வந்தது அதன் மொத்த மதிப்பு 2-கோடி ரூபாய் வரும் என தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில், மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில், ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர்.

காவல்துறையினர் பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து தற்போது 30-சவரன் நகை 16-லட்ச ரூபாய் பணம் சொத்து ஆவணங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் தன் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் துரைசாமியிடம் காவல்துறை விசாரணை மட்டுமல்லாது வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...