அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டதன் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி கோவை காட்டூர் முனியப்பன் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ஜெகநாதன் (41) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க கோவை காட்டூர் சரக உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் பரிந்துரை செய்தனர்.
அதையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் ஜெகநாதன்ஒரு ஆண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி கோவை காட்டூர் முனியப்பன் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ஜெகநாதன் (41) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க கோவை காட்டூர் சரக உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் பரிந்துரை செய்தனர்.
அதையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் ஜெகநாதன்ஒரு ஆண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.