கொடநாடு கொலை வழக்கு: கோவையில் அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக வர்த்தக அணி தலைவர் மற்றும் தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பான சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக வர்த்தக அணி தலைவர், தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜீவன் மீது தொடக்கத்திலிருந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கொடநாடு எஸ்டேட் கொள்ளைக்கு பங்களாவில் உள்ள லாக்கரை திறக்க ஏதேனும் உதவியுள்ளாரோ..? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...