கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக வர்த்தக அணி தலைவர் மற்றும் தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பான சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக வர்த்தக அணி தலைவர், தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஜீவன் மீது தொடக்கத்திலிருந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கொடநாடு எஸ்டேட் கொள்ளைக்கு பங்களாவில் உள்ள லாக்கரை திறக்க ஏதேனும் உதவியுள்ளாரோ..? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக வர்த்தக அணி தலைவர், தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஜீவன் மீது தொடக்கத்திலிருந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கொடநாடு எஸ்டேட் கொள்ளைக்கு பங்களாவில் உள்ள லாக்கரை திறக்க ஏதேனும் உதவியுள்ளாரோ..? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.