சூலூர் தாலுகாவில் சுகாதார திருவிழா: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைப்பு..!

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை இந்த சுகாதார திருவிழாவில் நடைபெற்றன.


கோவை: கோவை, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் சுகாதார திருவிழா கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கட்டாபுரம் மற்றும் சுல்தான்பேட்டையில் நடைபெற்றது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை இந்த சுகாதார திருவிழாவில் நடைபெற்றன.



சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.வி.மகாலிங்கம் மற்றும் முத்துமாணிக்கம், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதேபோன்று முதல்வர் காப்பீட்டு அட்டை ஆகியவைகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கண், காது, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதேபோன்று வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார திருவிழாவை பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று துவக்கி வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...