கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு வனம் மற்றும் காட்டு யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…!

தொடரும் காட்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக, வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம், காடுகளுக்கு யானை எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவை: கோவையில் தொடர் யானைகள் உயிரிழப்பு எதிரொலியாக, கல்லூரி மாணவர்களுக்கு வனம் மற்றும் காட்டு யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



கோவையில் சமீபகாலமாக காட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும், நிலையில் தமிழகம் முழுவதும் இயற்கை மற்றும் இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை ஆய்வு செய்ய 3 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் அடங்கிய சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த குழு தமிழகம் முழுவதும் இயற்கை மற்றும் இயற்கைக்கு முரணாக முறையில் உயிரிழப்புகள் குறித்து சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.

மேலும் இந்த குழு அண்மையில் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது, இதில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.



அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகத்திற்கும் ஒவ்வொரு தன்னார்வ அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனம் மற்றும் காட்டுயானைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தினர்.

அதன் முதல் துவக்கமாக கோவை மதுக்கரை வனச்சரகத்தில் உட்பட்ட சோல கரை வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம், காடுகளுக்கு யானை எவ்வளவு முக்கியமானது, வனத்தில் யானைகளின் பங்களிப்பு என்ன?, வனப்பகுதியில் வன ஊழியர்களின் பணிகள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



குறிப்பாக வனப்பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிகள், அண்மையில் நடந்த யானை உயிரிழப்பு மற்றும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது, அதேபோல் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி ஆகியவை பற்றி மதுக்கரை ரேஞ்சர் சந்தியா விளக்கமளித்தார்.



அதனைத்தொடர்ந்து இயற்கை பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஜலாலுதீன் கூறும் போது:-

வன உயிரினங்களின் முக்கியத்துவம், காட்டு யானைகளின் பங்களிப்பு ஆகியவற்றைக் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்கள் இந்த விழிப்புணர்வை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் வாரம் ஒரு முறை கோவையில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...