மாவட்டத்தில் மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 109 மி.மீ., கோடைமழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் கோடைமழையை காட்டிலும் 57 சதவீதம் அதிகம்.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 57-சதவீதம் கூடுதலாக கோடைமழை பெய்துள்ள நிலையில், வரும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 109 மி.மீ., கோடைமழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் கோடைமழையை காட்டிலும், 57 சதவீதம் அதிகம். கோடைமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்வதால் கோடை வெயில் உஷ்ணம் குறைந்துள்ளது.
வால்பாறையில், பெய்யும் மழையால், ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் சித்திரை பட்டத்தில் சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால், இந்தாண்டு பயிர் சாகுபடிக்கும், பாசன தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 109 மி.மீ., கோடைமழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் கோடைமழையை காட்டிலும், 57 சதவீதம் அதிகம். கோடைமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்வதால் கோடை வெயில் உஷ்ணம் குறைந்துள்ளது.
வால்பாறையில், பெய்யும் மழையால், ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் சித்திரை பட்டத்தில் சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால், இந்தாண்டு பயிர் சாகுபடிக்கும், பாசன தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.